tamilnadu

img

2 பெண்கள் கொடூரமாக வெட்டி படுகொலை...

திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே முன்விரோதம் காரணமாக இரண்டு பெண்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால் குறிச்சியைச் சேர்ந்த அருணாசலம் மனைவி சண் முகத்தாய் (50). அதே பகுதியைச் சேர்ந்த சுப்பையா மனைவிசாந்தி(35). இரு குடும்பத்தினரும் உறவினர் ஆவர். இந்த நிலையில், சனிக்கிழமை (செப்.26)  அடையாளம் தெரியாத கும்பல் இவர்கள் வீட்டின் மீது வெடிகுண்டு வீசியதாகக் கூறப்படுகிறது. சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியேவந்த சண்முகத்தாய், சாந்தி ஆகியோரை அந்த  கும்பல் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் பலத்த காயமடைந்த சண்முகத்தாய், சாந்தி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதில் சண்முகத் தாயின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து தகவலறிந்த நான்குநேரி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார். இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த மார்ச் மாதம் நான்குநேரி பகுதியில் உள்ளஉணவகத்தில் இரண்டு பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டசம்பவத்திற்கு பழிக்குப்பழியாக  இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. மறுகால்குறிச்சியில் பதற்றம்நிலவுவதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

;