அரியலூர், மார்ச்.2- போதையற்ற தமிழ்நாட்டை உரு வாக்கக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஒரு கோடி கையெ ழுத்து பெறும் இயக்கம் தமிழ்நாடு முழுவ தும் நடைபெற்று வருகிறது. இதனொரு பகுதியாக அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் மாவட்டத் தலைவர் ரவீந்திரன் தலைமையில், மாவட்டப் பொருளாளர் அருண்பாண்டி யன் முன்னிலையில் ஒரு கோடி கையெ ழுத்துக்கள் பெறும் இயக்கம் நடை பெற்றது. ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் ஜெகநாத் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார். பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள், பயணிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என ஏராளமானோர் ஆர்வ முடன் வந்து கையெழுத்திட்டனர். நிகழ்வில், முன்னாள் மாவட்டச் செய லாளர் இளங்கோவன், மாவட்டத் தலைவர் வெங்கடாஜலம், கைத்தறி நெசவு தலை வர் எஸ்.எம்.துரைராஜ் உள்ளிட்டோர் உட னிருந்தனர். குடவாசல் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வி.பி.சிந்தன் பேருந்து நிலையத்தில் ஒன்றி யச் செயலாளர் கே.பகத்சிங் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் குடவாசல் காவல் ஆய்வாளர் ராஜ் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிபிஎம் குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செய லாளர் எம்.கோபிநாத் உள்ளிட்டோர் கையெ ழுத்தை பதிவிட்டனர். சேலத்தில் இருந்து வந்திருந்த வாசகி என்ற பெண்மணி பேருந்தில் இருந்து இறங்கி வந்து தனது கையெழுத்தை பதிவிட்டார்.