tamilnadu

img

இளைஞர்கள் செல்போன் டவரில் ஏறி நின்று எதிர்ப்பு

நெப்பத்தூர் மணல் குவாரியை மூடக் கோரி 

சீர்காழி, ஆக.14- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே  நெப்பத்தூரில் தனியாருக்கு சொந்தமான இட த்தில் மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த  மணல் குவாரியை இழுத்து மூட வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த செந்தில் மற்றும் பார்த்திபன் ஆகிய இரு இளைஞர்களும் கையில் தேசியக் கொடியை ஏந்தி சேர்ந்த செல்போன் டவரில் இருந்து கொண்டு மணல் குவாரியை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று முழக்கமிட்டனர். நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ குளிப்பதாக  அறிவித்துள்ளனர். இந்நிலையில் இதுகு றித்து தகவலறிந்த சீர்காழி தாசில்தார் ரமா தேவி, சீர்காழி டிஎஸ்பி யுவபிரியா மற்றும்  சீர்காழி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இட த்திற்கு வந்து செல்போன் டவரில் ஏறி நின்று கொண்டிருந்த இரு இளைஞர்களை கீழே இறக்கி விசாரணை நடத்தி வருகின்றனர்.  நெப்பத்தூரில் இயங்கி வரும் மணல் குவாரியை மூடுவது குறித்து மாவட்ட ஆட்சி யரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் உறுதியளித்தனர். இதுகுறித்து போலீ சார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.