tamilnadu

img

பணி நிறைவு பாராட்டு விழா

கரூர், ஜூன் 2-கரூர் டிஎன்பிஎல் காகித ஆலையில் பணியாற்றி பணி ஓய்வுபெற்ற பி.ராமசுப்பு பணி நிறைவு பாராட்டு விழா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிஎன்பிஎல் கட்சி கிளைகளின் சார்பில் புகளூரில் நடைபெற்றது. விழாவிற்கு கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் எஸ்.பூரணம் தலைமை வகித்தார். கட்சியின் மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், முன்னாள் மாநிலக்குழு உறுப்பினர் கே.துரைராஜ், மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜி.ஜீவானந்தம் ஆகியோர் பேசினர். சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், கரூர் ஒன்றியச் செயலாளர் கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் காதர்பாட்ஷா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பி.ராமசுப்பு நன்றி கூறினார்.

;