tamilnadu

img

டிசம்பர் வரை ரேசன் கடைகளில் நிவாரணம் கோரி பெண்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, ஜூலை 17- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் அனைத்து ரேசன் கார்டு களுக்கும் 21 வகையான அத்தியாவசிய பொ ருட்களை இலவசமாக வழங்க வேண்டும், ரேசன் கார்டு இல்லாத புலம்பெயர் தொழி லாளர்களுக்கு ரேசன் பொருட்களை இலவச மாக வழங்க வேண்டும், ரேசன் கார்டு அடிப்ப டையில் நிவாரண நிதியாக மாதம் தலா ஆயி ரம் வழங்க வேண்டும், இவை அனைத்தை யும் டிசம்பர் மாதம் வரை வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொன்னமராவதி-புதுப்பட்டி  ரேசன் கடை முன்பு சங்கத்தின் ஒன்றிய பொறு ப்பாளர் மதியரசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அனைத்திந்திய ஜனநாயக மாதர்  சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செய லாளர் டி.சலோமி சிறப்புரையாற்றினார். ஜி.கலையரசி, ஆர்.ரேணுகாதேவி, பழனி யாயி, சௌந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

சீர்காழி தாலுகாவில் மாதர் சங்கம் சார்பில் பச்சை பெருமாநல்லூர் ஊராட்சி யில் உள்ள அங்கன்வாடி முன்பு கே.கௌ சல்யா தலைமை வகித்தார். ஆலாலசுந்தரம் ஊராட்சி, ஆச்சாள்புரம் ஊராட்சியிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

;