tamilnadu

கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

புதுக்கோட்டை, நவ.12- புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே செவ்வாய்க்கிழமையன்று கணவர் உயிரிழந்த அதிர்ச்சி யில் மனைவியும் உயிரி ழந்தார். புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியைச் சேர்ந்தவர் வெற்றிவேல்(85). இவரது மனைவி பனச்சாயி (80). விவசாயத் தொழிலா ளர்களான இவர்களுக்கு 5 மகன்கள், 1 மகள் உள்ளனர். அனைருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில் வயது முதிர்வினால் வெற்றி வேல் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.  இது குறித்து தகவல் அறிந்த அவரது மனைவி பனச்சாயி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் வீட்டிலேயே உயி ரிழந்தார். இருவரது உடல்க ளும் இரு வேறு குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து அஞ்சலி செலுத்தி, அடக்கம் செய்யப்பட்டன.

;