tamilnadu

img

மதுரை வளர்ச்சிக்கு ஆலோசனைக் குழு அமைப்போம்

மதுரை, மே 26-அரசியல், கருத்து வேறுபாடுகளைக் களைந்து அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப் போடு மதுரையின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பாடுபடுவதே லட்சியம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறினார்.மதுரையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-மதுரை தொகுதி மக்களவை உறுப்பினராக என்னை (சு.வெங்கடேசன்) தேர்வு செய்த வாக்காளர் கள், வெற்றிக்கு இரவு பகல் பாராதுஉழைத்த திமுக உள்ளிட்ட மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தலைவர்கள், செயல்வீரர்கள், குடியிருப்போர் நலச்சங்கங் கள், தன்னார்வ அமைப்புகள் இதற்கும் மேலாக மதுரையை நேசிக்கிற அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை உரித் தாக்கிக்கொள்கிறேன்.தேர்தல் சிறப்பாக நடைபெற பணியாற்றிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் தேர்தல் செய்திகளை தினந்தோறும் மக்களுக்கு கொண்டு சேர்ந்த அச்சு, காட்சி ஊடகங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மதுரையின் வளர்ச்சி, மேம்பாடுகுறித்து தேர்தல் காலத்தில் தனியாக அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டது. அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளவற்றை அனைவரின் ஒத்துழைப்போடு ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம். அதற்காக ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ராஜன் செல்லப்பா, மதுரைசிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனால் நிழற் குடை மட்டும் தான்கட்டித் தர முடியும் எனக் கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர்எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், மதுரை மக்களுக்கு நிழற்குடையும் முக்கியமானது தான்.பெரியார் பேருந்து நிலையம்கட்டி முடிப்பதற்கு இரண்டாண்டுகள் ஆகும். அங்கு இன்றைக்கும்பல்லாயிரக்கணக்கான மக்கள்வெயிலில் நின்று கொண்டிருக்கிறார்கள் என்றார்.சு.வெங்கடேசனால் எந்தளவிற்கு நாடாளுமன்றத்தில் உரையாற்ற முடியும்; அவரால் மதுரையின் வளர்ச்சிக்கு ஒன்றும் கிடைக்கப்போவதில்லை என ராஜன் செல்லப்பா கூறியுள்ளாரே என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், ராஜன்செல்லப்பாகூறியதை ஒன்றும் பெரிதாகஎடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. அவர் தேர்தல் தோல்வியின் விரக்தியிலிருந்து பேசுகிறார். என்றார்.மேலும், “இது ஒன்றும் மன்னராட்சி அல்ல. ஜனநாயக நாடு, ஜனநாயக ஆட்சி. இதில் எதிர்க்கட்சிகளின் பணி முக்கியமானது. ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நீதியை நிலை நாட்டுகிற துலாக்கோல் போல் செயல்பட வேண்டும். துலாக்கோலில் ஆளுங்கட்சி ஒரு தட்டு என்றால், எதிர்க்கட்சி ஒரு தட்டு இது இரண்டும் சரி சமமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் உள்ளடக்கத்தை அறிந்தவர்கள் அதைத்தான் செய் வார்கள். தமிழகத்தில் வெற்றி பெற்றுள்ள 37 மக்களவை உறுப்பினர்களும் இந்தியாவின் முகமாக செயல்படுவார்கள்” என்றும் சு.வெங்கடேசன் கூறினார்.கம்யூனிஸ்ட்டுகளால் தொழிற் சாலைகள் பல மூடப்பட்டுள்ளன என ராஜன் செல்லப்பா கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த சு.வெங்கடேசன், தேர்தல் சமயத்தில் இதை ராஜன் செல் லப்பா கூறியிருந்தால், தொழில் வளர்ச்சியில் கம்யூனிஸ்ட்டுகள் எந்தளவிற்கு பங்களிப்பு செய்துள்ளார்கள் என்பதை பட்டியலிட்டிருக்க முடியும். இன்றைக்கும் சேலம்உருக்காலை, நெய்வேலி லிக்னைட் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் கம்யூனிஸ்ட்டுகளால் தான் கொண்டுவரப்பட்டன. மறைந்த தோழர் பொ.மோகன் மக்களவை உறுப்பினராக இருந்தபோதுதான் விமான நிலைய விரிவாக்கம், எய்ம்ஸ் மருத்துவமனை போன்றதிட்டங்கள் மதுரைக்குக் கிடைத்தன.

ராஜன் செல்லப்பா கூறியிருப்பதெல்லாம் முடிந்துபோன அத்தியாயம். நாங்கள் வெளியிட்டுள்ள மதுரை தேர்தல் அறிக்கையை சீர்தூக்கிப் பார்த்துத்தான் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்” என்று கூறினார்.எத்தகையை திட்டங்களைச் செயல்படுத்துவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, மதுரையின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் தேவையான திட்டங்களைக் கொண்டுவருவோம். நல்ல திட்டங்களுக்காக போராடுவோம்.சேலம், நாமக்கல் உள்ளிட்ட நகரங்களின் வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் மதுரை ஒரு கைவிடப்பட்ட நகரமாகவே உள்ளது. மதுரையின் முகத்தோற்றத்தை மாற்ற அரசியலைக் கடந்து, தேர்தலைக் கடந்து,கருத்து வேறுபாடுகளைக் கடந்து மதுரையில் உள்ள இரண்டு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் பங்களிப்போடு, அவர்களின் ஒத்துழைப்போடு கைகோர்த்து பணியாற்றுவோம். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் நானும் முக்கியப் பங்காற்றுவோம். மதுரை நகரின்வளர்ச்சிக்கு யாருடனும் கைகோர்ப்பதில் எங்களுக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று சு.வெங்கடேசன் கூறினார்.பேட்டியின் போது கட்சியின்மாநிலச்செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், புறநகர்மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப. கதிரவன்,மதுரை மக்களவை தொகுதி பொறுப்பாளர் பாண்டியம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.