tamilnadu

img

ஸ்ரீரங்கம் பகுதியில் குடிநீருடன் சாக்கடை நீர் கலப்பு

திருச்சிராப்பள்ளி, அக்10- ஸ்ரீரங்கம் மாநகராட்சிக்குட்பட்ட 2வது வார்டு பூசந்தை பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இப்பகு தியில் 2 குடிநீர் பொதுக்குழாய்கள் உள் ளன. இப்பகுதிக்கு காலை ஒன்றரை மணி நேரமும், மாலை ஒரு மணிநேர மும் மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப் படும் குடிநீர் கடந்த 6 மாதங்களாக கலங்கலாகவும், சாக்கடை நாற்றத்து டனும் வருவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து இப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கடந்த 10 நாட்களுக்கு முன் புகார் தெரி வித்தும் இதுநாள் வரை எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் குடிநீரில் கருப்பு துகள்கள் வரு வதால் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருகின்றதோ என்ற சந்தேக மும் இதனால் தொற்றுநோய் போன்ற வியாதிகள் பரவுமோ என்ற அச்ச மும் இப்பகுதி மக்களிடம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து பொது மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வைக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.