தஞ்சாவூர் ஜூலை.14- மழைநீர் சேகரிப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்ட நீர் மேலாண்மை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து பேரணி நடைபெற்றது. பேரணியை பட்டுக்கோட்டை கோட்ட உதவி செயற் பொறியாளர்(ஊரக வளர்ச்சி) கருப்பையா துவங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி) கை.கோவிந்தராசன், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) வி.கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உட்பட சுமார் 450 பேர் பேரணியில் கலந்து கொண்டனர்.