திருச்சிராப்பள்ளி, ஜூலை 29- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட த்தின் கீழ் வேலை செய்யும் விவசாய தொழிலாளர்க ளுக்கு முழுமையாக நூறு நாட்கள் வேலை வழங்க வேண்டும். சட்டக்கூலி ரூ.256 ஐ நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அந்தநல்லூர் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. விதொச மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். வி.ச மாவட்ட செயலாளர் கே.சி பாண்டியன், விதொச மாவ ட்ட செயலாளர் தங்கதுரை, ஒன்றிய தலைவர் சுப்ரம ணியன், ஒன்றிய பொருளா ளர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். துறை யூர் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு சங்க ஒன்றிய தலை வர் எம்.ஆனந்தன் தலைமை வகித்தார்.