tamilnadu

img

மேட்டுப்பாளையம் சம்பவம்:

பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் கோரி ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், டிச.6- பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளா கத்தில் உள்ள காந்தி சிலை எதிரே தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வியாழக் கிழமை கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட் டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவர் எம்.கருணாநிதி தலைமை வகித் தார். மாவட்டச் செயலர் என். செல்லதுரை முன்னிலை வகித்தார்.  தமுஎகச ப.செல்வ குமார், மதிமுக துரைராஜ், திராவிடர் கழகம் அக்ரி ஆறு முகம், தங்கராசு, பெரியார் திராவிடர் கழகம் தாமோதி ரன், வழக்கறிஞர்கள் ஸ்டாலின் ப.காமராசு, சங்கர் எஸ்டிபிஐ அபுபக்கர் சித்திக், தமுமுக தவ்கீர்பாஷா, அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி.ரமேஷ், பி.கிருஷ்ணசாமி, உள்பட திரளானோர் பங் கேற்றனர்.   ஆர்ப்பாட்டத்தில் மேட்டுப் பாளையம் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, போலீசாரால் கைது செய்யப் பட்ட நபர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறு த்தி முழக்கமிட்டனர்.

;