பெரம்பலூர், ஜூலை 9- பெரம்பலூரில் நான்கு ரோடு சந்திப்பு அருகே சென்னை நான்கு வழிச்சாலையில் செவ்வாயன்று காலை புள்ளிமான் ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்து கிடந்தது. தகவலறிந்த பெரம்பலூர் வனச்சரக அலுவலர் சசி குமார் மேற்பார்வையில் வனவர் பாண்டியன் தலைமையில் வனக்குழுவினர் அங்கு சென்று இறந்து கிடந்த புள்ளி மானை கைப்பற்றினர். பின்பு பிரேத பரிசோதனை செய்யப் பட்டு, புள்ளிமானின் சடலம் சித்தளியில் உள்ள வனக்காப்புக் காட்டில் புதைத்தனர். இறந்த புள்ளிமான் 3 வயதான ஆண் மான் என்றும், செங்குணம் பிரிவு பாதை அருகே உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வந்த போது வாகனம் மோதி இறந்திருக்க லாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.