tamilnadu

img

டிராலி தள்ளும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கஞ்சித் தொட்டித் திறக்கும் போராட்டம்....

திருச்சிராப்பள்ளி:
திருச்சி விமான நிலைய தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு தினமும் மாமூல்பணம் தர மறுத்ததால் வேலை நிறுத்தம் செய்யப்பட்ட 20 டிராலி தள்ளும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கவேண்டும். அரசாணைப்படி தினக்கூலிரூ.525 வழங்க வேண்டும். தொழிலாளர் களிடம் 2 வருடங்களாக தினமும் ரூ.600வசூல் செய்த தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர் மாவட்டக்குழு தலைமையில் டிராலி தள்ளும் தொழிலாளர் கள் விமான நிலையம் முன்பு குடும்பத்தோடு கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்துக்கு சிஐடியு மாநகர்மாவட்ட துணை தலைவர் மணிமாறன்தலைமை வகித்தார்.  போராட்டத்தை விளக்கி பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன், போக்குவரத்து சங்க உறுப்பினர் மணிமாறன், லட்சுமணன் ஆகியோர் பேசினர். இதில் டிராலிதள்ளும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.