திருச்சிராப்பள்ளி, அக்.14- திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் திங்களன்று ஆட்சியர் சிவராசு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு சாலையோர வியா பாரிகள் சங்க(சிஐடியு) புறநகர் மாவட்டச் செய லாளர் பழனிசாமி, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: திருச்சி– தஞ்சை மெயின் சாலை துவாக் குடி பகுதிகளில் தள்ளுவண்டி, தரைக்கடை கள் அமைத்து சுமார் 20 வருடங்களுக்கும் மேலாக வியாபாரம் செய்து தங்கள் பிழைப்பை நடத்தி கொண்டு உள்ளார்கள். இந்த வியாபாரத்தை வைத்து தான் அவர்களின் மருத்துவச் செலவு, வீட்டு வாடகை, குழந்தைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி கட்டணம். உணவு என அனைத்தும் இந்த சாலையோர வியா பாரத்தை நம்பி தான் உள்ளது. சாலையோ ரம் வியாபாரம் செய்வதற்கு காவல்துறை, தேசிய நெடுஞ்சாலை(தஞ்சை) மதுக்கான் ஆகிய துறைகளிடம் பேசி அனுமதி பெற்று தான் வியாபாரம் செய்து வருகிறோம். சாலையோர வியாபாரிகளுக்கு ஆதரவாக நாடாளுமன்ற சட்டம் 2014 மற்றும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு என சட்டங்கள் உள்ளன. இந்த சட்டங்களுக்கு உட்பட்டு தான் கடை கள் நடத்தி வருகிறோம். கடந்த ஒருமாத காலமாக மதுக்கான் நிர்வாகம் எங்களது கடைகளை காலி செய்ய வேண்டும் என்று கூறி வருகிறது. நாங்கள் அவர்களிடம் சாலைப் பணி நடக்கும் போது எடுத்து கொள்கிறோம் என்று கூறிய போதும் மதுக்கான் நிர்வாகம், கடைகளை காலி செய்ய வேண்டும் என எங்களுக்கு தபால் தந்துள்ளது. மேலும் பொக்லைன் இயந்தி ரத்தை வைத்து கடைகளை உடைப்பதும், இயந்திரத்தின் மூலம் கடைகளை தூக்கி செல்வது என அத்துமீறி நடந்து வருகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் எங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
குடியிருப்போர் நலச் சங்க கூட்டமைப்பு
இதே போன்று அண்ணாநகர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: திருச்சி திரு வெறும்பூரை அடுத்த நவல்பட்டு அண்ணா நகரில் நீண்ட காலமாக பாதாளச் சாக்கடை திட்டத்தை புனரமைக்காததையும், காவிரி குடிநீர், சாலை மேம்பாடு ஆகியவற்றை நிறைவேற்றாததை கண்டித்து போராட்டம் நடத்துவது என்று அறிவித்திருந்தோம். அதன் அடிப்படையில் வட்டாட்சியர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து சங்க நிர்வாகிகளும் கடந்த 11ம்தேதி சென்றோம். வட்டாட்சியர் அண்ணா நகருக்கு வந்து கள ஆய்வு செய்த பின் அமைதி பேச்சுவார்த்தை நடத்தலாம் என கடிதம் கொடுத்து விட்டு வந்தோம். கடந்த சனிக்கிழமை அன்று வட்டாட்சி யர் அண்ணாநகர் வந்து பார்வையிட்டார். ஆனால் எந்த பதிலும் சொல்லாமல் பாதி யிலேயே சென்று விட்டார். ஆகவே தாங்கள் இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தருமாறு கேட்டுக்கொள்கி றோம் என மனுவில் தெரிவித்திருந்தனர்.