tamilnadu

img

தோழர் கோ.வீரய்யனுக்கு அஞ்சலி

மன்னார்குடி, நவ.17- நவ.18 அன்று குடவாசலில் நடை பெற விருக்கும் தோழர் கோ. வீரய்யன் முதலாமாண்டு நினைவு தினத்தை யொட்டி ஞாயிறு அன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் தீக்கதிர் சிறப்பு விற்பனை நடைபெற்றது. தோழர் ஜி.வி.க்கு அஞ்சலி செலுத்தும் கூட்டங் களும் நடைபெற்றன.  கோட்டூரில் நடைபெற்ற கூட்டத் திற்கு கோட்டூர் ஒன்றிய செயலாளர் எல். சண்முகவேலு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாக ராஜன் ஜி.வி. படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி உரை யாற்றினார். கட்சியின் மூத்த தோழர் எஸ். தங்கராசு மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் தீக்கதிர் சிறப்பு விற்பனை இயக்கம் நடைபெற்றது. மன்னார்குடி நகரக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர செயலாளர் எஸ். ஆறுமுகம் தோழர் கோ. வீரையன் படத்திற்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பின் னர் நகரில் நடைபெற்ற தீக்கதிர் சிறப்பு விற்பனை இயக்கத்தில் நகரக்குழு உறுப்பினர்கள் ஜி.ரெகுபதி, எம். சிராஜுதீன், ஜி. தாயுமானவன், பி. கலைச்செல்வி, ப. தெட்சிணாமூர்த்தி, எம். மகாதேவன் மற்றும் கிளை செய லாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்ற னர்.

ஐ.வி.நாகராஜன் நூல் வெளியீடு

நவ.18 காலை 7 மணியளவில் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தோழர் கோ. வீரையன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. அதனை தொடர்ந்து 10 மணிக்கு குடவாசலில் அஞ்சலி செலுத்தும் பேரவைக் கூட்டத்தில் ஐ.வி.நாகராஜன் எழுதிய விழித்துக் கொள்ளும் தருணம் என் னும் கட்டுரைத் தொகுப்பு வெளியிடப் படுகிறது.