tamilnadu

img

பணி செய்ய விடாமல் மிரட்டிய நிர்வாகி மீது   நடவடிக்கை கோரி டிஆர்இயுவினர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி: திருச்சி கோட்ட தனிப்பிரிவு அலுவலக ஊழியர்களை மயிலாடுதுறையில் பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டிய ரெயில்வே தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே அளித்த புகாரின் மேல் கோட்ட மேலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி டிஆர்இயு சார்பில் திருச்சி ஜங்சனில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் மொய்தீன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி கோட்ட செயலாளர் கண்ணன், உதவி கோட்ட செயலாளர் சரவணன், சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் டிஆர்இயு நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.