தஞ்சாவூர்: பதினான்காவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும். வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை விரைந்து வழங்க வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி அரசு விரைவுப் போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு நடைபெற்ற கூட்டத்திற்கு, சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சா.செங்குட்டுவன் தலைமை வகித்தார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், தூயமணி, பாஸ்கரன் கோரிக்கைகளை ஆதரித்து பேசினர். தொமுச செயலாளர் ராஜேந்திரன், தலைவர் எட்வின் பாபு, சிஐடியு மத்திய சங்க துணைச் செயலாளர் பி.வெங்கடேசன், சிஐடியு பணிமனைச் செயலாளர் அ.க.பழனிவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். நிறைவாக சிஐடியு தொழிற்சங்கப் பொருளாளர் ஆர்.முருகேசன் நன்றி கூறினார்.