நாகப்பட்டினம், ஜூன் 9- அரசுப் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் 16-வது மண்டல மாநாடு நாகப்பட்டினத்தில் ஜூலை-1, 2 ஆகிய இரு நாட்கள் நடைபெறவிருப்பதை ஒட்டி மாநாட்டிற்கு வரவேற்பு அளிக்கும் வண்ணம் நாகை போக்குவரத்துக் கழகப் பணிமனை முன்பு சனிக்கிழமை சி.ஐ.டி.யு. கொடிகள் ஏற்றப்பட்டன. நிகழ்ச்சிக்கு சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி தலைமை வகித்தார். அரசுப் போக்குவரத்து ஊழியர் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.