tamilnadu

img

தொழிலாளர் விரோத மத்திய அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், மே 22- மத்திய அரசு பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி அமைப் பது உள்ளிட்டவை கண்டித்து சிஐடியு, ஏஐடியுசி, எம்பிஃப், ஐஎன்டியுசி உள்ளிட்ட மத்திய சங்கங்களில் சார் பில் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட 8 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நேதாஜி சாலை இந்தியன் வங்கி முன்பாக சிஐடியு மாவட்டத் தலைவர் இரா.மாலதி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொ ழிற்சங்க தலைவர்கள் ராஜாஜி, ராக் வன், பூவரசன், ஐயப்பன், ஜீவா, வேணி, மலர்கொடி, மேரி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.ராமசாமி, ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க தலைவர் ஆர்.கோவிந்தராஜ், மூத்த உறுப்பினர் எஸ்.கிருஷ்ணன் ஆகி யோர் போராட்டத்தை ஆதரித்து உரையாற்றினர்.

பழைய பேருந்து நிலையம் அருகில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ஜி.பழனிவேல் தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் சந்திரசேகரஆசாத், மத்திய சங்க தலைவர் அசோக், தம்பிதுரை, சிவகுரு, குணசேகரன், சின்னதம்பி கலந்து கொண்டனர்.  கூட்டுறவு அங்காடி முன்பு ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எம்.கே..என்.அனிபா, எம்.ஆர்.எம் அருகில் ஏ.ஜேம்ஸ்ராஜ், தலைமை அஞ்சலகம் முன்பாக ஆட்டோ சங்க நகர செயலாளர் ஜி.பழனிவேல், நுகர்பொருள் வாணிப கழகம் முன்பாக ஏஒன்.மணி, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பாக கே.ராஜேந்திரன், அரசு போக்குவரத்து பணிமனை முன்பாக கிளைத் தலைவர் மோகன் ஆகி யோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தரங்கம்பாடி இதே போல் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் போக்குவரத்து பணிமனை முன்பாக சிஐடியு, தொமுச தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட பொருளாளர் ஆர்.ரவீந்தி ரன், சிறு விற்பனையாளர் சங்க மாவட்டச் செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொறையார் போக்குவரத்து பணி மனை முன்பு அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்கடையூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு கட்டுமான சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தொழிலாளர் விரோத மத்திய அரசை கண்டித்து கருப்பு பட்டை அணிந்து  சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் லெட்சுமணன், ஒன்றிய தலைவர் உதயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவி, சுந்தரவடிவேல், பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.