திருச்சிராப்பள்ளி, மார்ச்4- தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழ் வளர்ச்சி க்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொ ண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்ப டுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல் விருது’ வழங்கப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தமிழ்ச்செம்மல் விருதும் ரூ.25,000 பரிசுத் தொகையும் தகுதியுரையும் 2015 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே 2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு திருச்சி மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆர்வல ர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க ப்படுகின்றன. தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர் எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியு தவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது. தமிழ் வளர்ச்சித்துறையின் வலைதளத்தி லிருந்து விண்ணப்பங்களை (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ண ப்பிப்பவர்கள் தன்விரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் திருச்சி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் மார்ச் 20 ஆம் தேதிக்குள் அளிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.