துப்புரவு தொழிலாளர்கள் மனுக் கொடுக்கும் போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஜூன் 17- துப்புரவு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சக் கூலி ரூ.625 வழங்க வேண்டும். 56 மாதமாக பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் பணத்தை துப்புரவுத் தொழிலாளர்களின் இபிஎப் கணக்கில் உடனே வரவு வைக்க வேண்டும். துப்புரவுத் தொழிலா ளர்களின் சம்பளத்தில் மாதம் ரூ.1200 கொள்ளையடிக்கும் ஏஎம்கே மேன்பவர் காண்ட்ராக்டரின் ஒப்பந்த உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் திங்களன்று மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செய லாளர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாறன், மாவட்ட பொருளாளர் விஜயேந்திரன், மாவட்ட நிர்வாகிகள் டோம்னிக், ப்ரியா, லிகாய்வேலுச்சாமி, சிபிஎம் பொன்மலை பகுதி செயலாளர் கார்த்திகேயன் ஆகி யோர் பேசினர். பின்னர் மாநகராட்சி நிதி உதவி ஆணையர் திருஞானத்திடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. போராட் டத்தில் 100க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
மல்லிப்பட்டினத்தில் புதிய துறைமுகப் பணிகள்
தஞ்சாவூர், ஜூன் 17- தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் கிராமத்தில் படகு அணையும் துறை, படகு பழுது பார்க்கும் தளம், நிர்வாக அலு வலக கட்டிடம், இரண்டு மீன் ஏலக் கூடங்கள், இரண்டு வலை பின்னும் கூடங்கள், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், சிமெண்ட் சாலை கள், மழைநீர் வடிகால், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகி யவை ரூ.60 கோடி மதிப்பில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் 213 விசைப்படகுகளும், 102 வல்லம் படகு, 967 பாரம்பரிய மீன்பிடி படகுகள் நிறுத்தம் செய்வதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 4,249 மீனவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயன் பெறுவார். இத்திட்டத்தின் மூலம் மீன்பிடி தொழிலுக்கு தேவையான உப கரணங்களை இலகுவாக ஏற்றுவதற்கும், பிடித்து வரப்பட்ட மீன்களை இலகுவாக கையாளுவதற்கும் வகை செய்யப் பட்டுள்ளது. மேலும் மீன்களை சுகாதாரமான முறையில் விற்பனை செய்வதற்கும், மீனவர்களின் வாழ்வாதாரம் மேம் பாடு அடைவதற்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். கரையூர் தெருவில் ரூ.2 கோடி மதிப்பில் வலை பின்னும் கூடம், தார்ச்சாலை, 900 மி.மீ விட்ட ஆர்.சி.சி குழாய் பாலங்கள், வடிகால் வாய்க்கால் தூர்வாருதல் தடுப்பு சுவர் அமைத்தல் ஆகிய பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மீனவர்கள் சுகாதாரமான முறையில் வலைகளை பின்னுவ தற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. ஏரிப்புறக்கரையில் ரூ.1 கோடியே 23 லட்சம் மதிப்பில் வலை பின்னும் கூடம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.
ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வது தற்கொலைக்கு சமமானது
கும்பகோணம் ஜூன் 17- கும்பகோணம் அருகே திம்மக்குடியில் தமிழ்நாடு மருந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துவோர் சங்க 12-வது மாநில மாநாடு நடை பெற்றது. மாநாட்டுக்குழு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சரவணன், மாநில தலைவர் கருணைகடல், மாநில செய லாளர் கோபி, பொருளாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாநாட்டு குழு செயலாளர் ஆண்டனிஅப்பா வரவேற்றார். தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குனர் சிவபாலன் சிறப்புரையாற்றினார். மாநாட்டு குழு பொருளாளர் கோபிநாத் நன்றி கூறினார். கூட்டத்தில், மருந்துப் பொருட்களுக்கு நாடு முழுவதும் ஒரே வரியை விதிக்க வேண்டும். மருந்துகளை சந்தைப்படுத்துவோருக்கு என்று தனி உரிமம் வழங்க வேண்டும். உற்பத்தி மற்றும் மருத்துவத் துறைக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். மருந்துகள் ஆன்லைன் வியாபாரத்தால் தவறாக நடக்க வாய்ப்புள்ளது. ஆன்லைனில் மருந்துகளை வாங்கி உபயோகித்தால் நோயாளி களுக்கு அபாயகரமான செயல்களை ஏற்படுத்தும். எனவே மருந்து களை ஆன்லைனில் விற்பனை செய்வது தற்கொலைக்கு சமமான தாகும். அதனால் ஆன்லைனில் மருந்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டின் நிறைவில் தரமான மருந்துகள், உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த சிறப்பு பயிற்சி நடைபெற்றது.
சாராய வியாபாரியிடம் லஞ்ச பேரம் காவல் அதிகாரி சஸ்பெண்ட்
சீர்காழி, ஜூன் 17- கொள்ளிடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், சாராய வியாபாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய உரையாடல் வாட்ஸ்அப்பில் பரவியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். நாகை மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக சேகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கொள்ளிடம் பகுதியில் கள்ளச்சாராயம் விற்று வரும் ஒரு வரிடம் மாமூல் கேட்டு போனில், மாசம் ரூ.2 ஆயிரம், 3 ஆயி ரம் தேவையில்லை. முன்பு போலீசில் 15 பேர் தான் இருந்தோம். இப்போ 25 பேர் இருக்கிறோம். மாசம் ஆய்வா ளருக்கு ரூ.5000, போலீஸ்க்கு 5000 கொடுக்கற மாதிரி இருந்தா விற்கட்டும். இல்லையென்றால் விற்க வேண்டாம் என்று பேசிய உரையாடல் வாட்ஸ் அப்பில் பரவியது. இதனையடுத்து கொள்ளிடம் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட எஸ்பி விஜயக்குமார் உத்தரவிட்டார்.