திருச்சிராப்பள்ளி, பிப்.23- ரயில்வேயில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கோட்டை ரயில் நிலையத்தில் நான்கு டிக்கெட் பரிசோதகர்கள் நிய மிக்கப்பட வேண்டிய இடத் தில் ஏழு பேரை நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இத னால் தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளில் டிடிஇ-க்கள் பற்றாக்குறை உள்ளது. இதைக் களைய வேண்டும். திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தில் கூடுதலாக உள்ள 37 டிக்கெட் பரி சோதகர்களை முறைப் படுத்த வேண்டும். சி.சி.எல் விண்ணப்பங்களை கிடப் பில் போடக்கூடாது. பெண் டிக்கெட் பரிசோதகர் களுக்கு ஓய்வறை வசதி செய்துதர வேண்டும் என வலியுறுத்தி திருச்சிராப் பள்ளி ரயில் நிலையம் முன்பு டிக்கெட் பரிசோதகர்கள் வியாழனன்று ஆர்எம்எஸ் தபால் நிலையம் முன்பு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.