தரங்கம்பாடி, ஜூலை 4- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் அருகேயுள்ள மேலையூரில் இயங்கி வரும் அழகுஜோதி அகாடமி சிபிஎஸ்சி பள்ளி வளாகத்தில் ஒரே நாளில் ஆயிரம் மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் நிறு வனர் கண்ணன், கல்வி இயக்குநர் கவிதா கண்ணன் ஆகி யோர் தொடங்கி வைத்தனர். தாளாளர் சிவக்குமார், முதல்வர் நோயல்மணி, துணை முதல்வர் அமுதா மற்றும் ஆசிரியர்கள், ஆசிரியைகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட னர். புவி வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மரங்க ளால் இந்திய வரைபடம் வடிவமைத்து மரம் வளர்ப்பு குறித்தும், மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாண வர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.