tamilnadu

img

நூறு நாள் வேலை கேட்டு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஆக.31- திருச்சி மாவட்டம் முசிறி ஒன்றியத்திற்கு ட்பட்ட வீரமணிபட்டி, கொல்லி ப்பட்டிப்பா ளையம், அந்தர்பட்டி, நெய்வேலி கிராமங்களில் ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தில் 100 நாள் முடியும் வரை பயனாளிகள் அனைவருக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். புதிய வேலை அட்டை வழங்க லஞ்சம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் புறநகர் மாவட்டக்குழு சார்பில் முசிறி பிடிஓ அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாதர் சங்க புறநகர் மாவட்ட செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். சிபிஎம் முசிறி ஒன்றிய செயலாளர் நல்லுசாமி, மாதர் சங்க விஜயா, ப்ரியா, சரோஜா, வீரமணி, விதொச தங்கராசு உள்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளுக்கு தீர்வு காண விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிடிஓ உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.