“ஆயிரமானலும் மாய வரம் போல் ஆகாது” என பெருமையாய் இந்நகரை புகழ்வது உண்டு. ஏராள மான அடையாளங்களை கொண்ட பழமையான நகரங்களுள் ஒன்றான இவ்வூர். மாயூரம், மாயவரம் என் றெல்லாம் அழைக்கப்பட்டு தற்போது மயிலாடுதுறை என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் நீதிபதியும், தமிழின் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வருமான மாயூரம் வேதநாயகம் பிள்ளை வாழ்ந்து மறைந்த ஊர், கவி சக்கரவர்த்தி கம்பர் பிறந்த ஊரான தேரழுந்தூருக்கு அருகா மையில் உள்ள ஊர், பல நூற்றாண் டுகளுக்கு முன்பே விலை உயர்ந்த முத்து, பவளங்களை வீதியில் விற்ற பூம்புகாருக்கு அருகில் உள்ள ஊர். 14 ஆம் நூற்றாண்டிலேயே கடல் மார்க்கமாக வணிகம் செய்த வரலாற்று சின்னங்கள் நிறைந்த தரங்கம்பாடிக்கு அருகில் உள்ள ஊர். காந்தியடிகளுக்கு போராட்ட குணத்தை தீவிரப்படுத்திய தியாகி வள்ளியம்மையின் ஊரான தில்லை யாடிக்கு அருகில் உள்ள ஊர்.
மேலும் திருக்கடையூர், திரு நள்ளாறு, வைத்தீஸ்வரன்கோயில், கீழப்பெரும்பள்ளம், மேலப்பெரும் பள்ளம் உள்ளிட்ட கோவில் நகரங்க ளுக்கு அருகில் உள்ள ஊர்- என்கிற பல அடையாளங்கள் உள்ள நிலை யில் திரும்பும் திசை எங்கும் வீதி யிலேயே சாக்கடை நதி பெருக்கெ டுத்து ஓடும் என்கிற அடையாளமும் புதிதாய் வந்துள்ளது. நாகை மாவட்டத்தில் அதிக வரு வாய் ஈட்டும் வர்த்தக மையமாக உள்ள இந்நகரில் அடிப்படை வசதி கள் முற்றிலும் கேள்விக்குறியா கவே உள்ளது. இந்நிலையில், கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மத்திய அரசு ரூ.20 கோடி, மாநில அரசு ரூ.15 கோடி, பொதுமக்கள் தரப்பில் ரூ.7 கோடி என 42 கோடி யில் பாதாள சாக்கடை திட்டம் நிறை வேற்றப்பட்டு நகராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டது. தரமற்ற குழாய்கள், பணிகளில் தரமில்லை என பல்வேறு தரப்பி னரின் குற்றச்சாட்டுகளோடு பெரும் ஊழலுடன் நிறைவடைந்த பணி யால் கடந்த சில ஆண்டுகளாக நகரப்பகுதி முழுவதும் தொடர்ந்து ஆபத்தான மிகப்பெரிய பள்ளங் கள் ஏற்பட்டுள்ளன. கடந்த ஓராண் டில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட இடங் களில் பாதாளச் சாக்கடை குழாய் கள் உடைந்து ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு எங்கு பார்த்தா லும் சாக்கடை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக தரங்கம்பாடி சாலை, சின்னக்கடைத்தெரு, கச்சேரி ரோடு, காந்திஜி சாலை, பட்டமங்கலத் தெரு, கொத்தத்தெரு, ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நகராட்சி அலு வலகங்கள் உள்ள பகுதிகள் என பள்ளங்களே இல்லாத பகுதியே இல்லை என்ற நிலையில் மயிலாடு துறை நகரப் பகுதிகள் உள்ளன. நிரந்தர தீர்வை உடனடியாக செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி யினர் கடந்த ஒருவார காலமாக வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்ற னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சி யின் மயிலாடுதுறை வட்டச் செய லாளர் மேகநாதன் கூறும்போது, நாள்தோறும் ஒரு பகுதியில் சாலை உள்வாங்குவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். மேலும் கழிவு நீர் உடைப்புகளிலி ருந்து வெளியேறி சாலையெங்கும் நதியாய் ஓடி பலருக்கும் தொற்று நோய் ஏற்பட்டு வருகிறது. வழக்கம் போல தற்காலிக பழுதுபார்க்கும் பணியை செய்து கொண்டிருக்கும் போதே மற்றொரு இடத்தில் பள்ளம் ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருவதால் வெளி யூர் வாசிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எப்போது எங்கு சாலை உள்வாங்கும் என தெரியாததால் மயிலாடுதுறை நகரப்பகுதியில் நடந்து செல்வ தற்குக்கூட மக்கள் அச்சப்படு கின்றனர்.
மேலும் கடுமையான துர்நாற்றத் துடன் சாக்கடை நீர் நதியாய் ஓடுவது போல, ஆங்காங்கே குப்பை கழிவுக ளும் மலைப்போல காணும் இட மெல்லாம் கிடக்கிறது. வீட்டுக்கு வீடு பல வரிகளை வசூல் செய்யும் நகராட்சி நிர்வாகம் செய்த மாபெரும் ஊழலால் இன்று மக்கள் வசிக்க தகுதியில்லாத நகர மாக மயிலாடுதுறை மாறி வரு கிறது. சமீபத்தில் சுகாதாரச் சீர்கே டால் ஆசிரியை ஒருவர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். தமிழக அரசும், மாவட்ட நிர்வா கமும் நிரந்தர தீர்வு ஏற்படுத்தி தர வேண்டுமென்பதை வலியுறுத்தி நவம்பர் 15 அன்று நடைபயணத்தை மேற்கொள்ள போவதாகவும், மாவட்ட நிர்வாகம் வெறும் ஆய்வை மட்டும் நடத்திவிட்டு அலட்சியமாக இருப்பதை கைவிட்டு நகரவாசிகள் பாதிப்பின்றி இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட் டங்களை பல வடிவங்களில் நடத்திக் கொண்டே இருக்கும் என்றார் மக்களை அச்சுறுத்தும் பாதாள சாக்கடை பாதிப்பை சரி செய்ய தமிழக அரசு எப்போது நடவடிக்கை எடுக்கப் போகிறது?
செ.ஜான்சன், தரங்கம்பாடி