tamilnadu

img

மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடை பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் மூடல்

தஞ்சாவூர், மே 8- பூதலூர் அருகே பொதுமக்கள், மாதர் சங்கத்தினரின் கடும் எதிர்ப்பு காரணமாக, வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்ட மதுக்கடை மூடப்பட்டது.  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம் புதுக்குடி ஊராட்சி யில் கடந்த 3 மூன்று வருடங்களாக இயங்கி வந்துள்ளது. தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையில், உள்ள இக்கடையால் இப்பகுதி பொதுமக்களுக்கு பல் வேறு இடையூறுகள் ஏற்பட்டன. எனவே, இந்தக் கடையை மூட வேண்டும் என பல்வேறு போராட் டங்களை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட மதுக்கடையை வியாழக்கிழமை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் நடை பெற்று வந்த நிலையில் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த னர். இந்நிலையில் கடை திறந்ததும் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், சிபிஎம் ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர், வாலிபர் சங்க ஒன்றி யச் செயலாளர் விஜயகுமார், விதொச ஒன்றியச் செயலாளர் மருத முத்து, புதுக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் இளவரசன், ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில்குமார், திமுக சிவானந்தம் மற்றும் பெண் கள், பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கடை யை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

இதையடுத்து அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் புகழேந்தி, வட்டாட்சியர் விஜய குமார், கலால் உதவி ஆணையர், டாஸ்மாக் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி அதிகாரிகளிடம் மாதர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக் கப்பட்டது. இதையடுத்து திறந்த மதுக்கடையை சிறிது நேரத்தில் அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். மாதர் சங்கம், பொதுமக்கள் போ ராட்டம் காரணமாக திறக்கப்பட்ட அன்றே மதுக்கடை பூட்டப்பட்டது.