tamilnadu

img

வாக்குறுதிகளை நிறைவேற்றாத வெல்லமண்டி நடராஜனை முற்றுகையிட்ட பொதுமக்கள் 

வாக்குறுதிகளை நிறைவேற்றாத அமைச்சர் வெல்லமண்டி நடராஜனை திருச்சியில் பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஇஅதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தபோது பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். கடந்த 5 வருடங்களாக தொகுதியின் பக்கம் வராத நீங்கள் தற்போது ஓட்டு கேட்க மட்டும் ஏன் வருகிறீர்கள். கடந்த தேர்தலில் தந்த வாக்குறுதியான குடிநீர்,தெருவிளக்கு,கொசுத்தொல்லைக்கு தீர்வு என எந்த தேவைகளையும் பூர்த்தி செய்து தரவில்லை.அமைச்சரை சந்திப்பதே மிகவும் கடினமாக இருக்கிறது என்றும் தங்கள் தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் செவி சாய்க்கவில்லை என்ற மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடினார்.இதையடுத்து அதிமுகவினர் வேறுபகுதிக்கு அழைத்துச்சென்றனர். ஏற்கனவே ”கடந்த 2016 திருச்சி கிழக்கு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின் சுமார் 5 வருட காலமாக அவரது தொகுதியில் எங்கு தேடியும் காணவில்லை” என அமைச்சருக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத் தகுந்தது.


 

;