tamilnadu

img

விளை நிலங்கள் வழியாக பதிக்க கொண்டு வந்த குழாய்கள் தீயில் எரிந்தன

தஞ்சாவூர், ஜூன் 29- நாகை மாவட்டம் நரிமணத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு சுத்திகரிக்கப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் தற்போது லாரி கள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதில் கூடுதல் செல வும், கால விரயமும் ஏற்படுவதை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனம், பூமிக்கடி யில் குழாய் பதித்து எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்ல முடிவு செய்தது. இதற்காக நாகை மாவட்டத்திலிருந்து திருச்சி மாவட்டம் வாழவந்தான் கோட்டை யில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு வரை பூமிக்கடியில் குழாய் பதிக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகள் முதலில் நாகை மாவட்டத்தில் தொ டங்கியுள்ளது. விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கப்படுவதற்கு நாகை மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்புகளை தெரி வித்து ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே அருந்தவபுரத்தில பூமிக்கடியில் குழாய் பதிக்க குழாய்கள் கொண்டு வந்து வயல் பகுதியில் இறக்க ப்பட்டுள்ளது. இப்பகுதியில் விளை நிலங்களில் குழாய் பதிக்கக் கூடாது என அப்பகுதி விவசாயிகள் கடந்த சில நாட்க ளாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதில் வியாழக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் வய ல்களில் கிடந்த பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்லும் குழாய்களுக்கு தீ வைத்து ள்ளனர். குழாய்களின் உள்பகுதியில் ரசாயன பூச்சுக்கள் இருந்ததால் அவை தீப்பிடித்து எரிந்தன. ஆனால் குழாய்கள் இரும்பால் இரு ந்ததால் குழாய்கள் தேசம் ஏதும் ஏற்பட வில்லை. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.