tamilnadu

img

கல்வெட்டு திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஜூன் 1-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் கிழக்கு ஒன்றியம் சார்பில் தோழர் வி.வி.கிருண்மூர்த்தி கல்வெட்டு திறப்பு விழா மற்றும் மே தின கொடியேற்று விழா, பொதுக்கூட்டம் திருச்சி சமயபுரம் நான்கு ரோடு அருகே நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் கனகராஜ் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் செல்லம்மாள், பாலகிருஷ்ணன், சேதுராமன், சசிகுமார், சக்திவேல், ராபின்சன், கோவிந்தராஜ், சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.இந்துராஜ், புறநகர் சிஐடியு மாவட்ட பொருளாளர் சம்பத், வழக்கறிஞர் சங்க தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிஐடியு தொழிற்சங்க தலைவர்கள் கட்டுமான சங்க சக்திவேல், விஸ்வவேல், மணல் மாட்டு வண்டி தொழிற்சங்க மணிகண்டன், ரமேஷ், ஆட்டோ ஒட்டுநர் சங்க பூபதி, கார்த்திக்கேயன், சாலை போக்குவரத்து சங்க சசிக்குமார், செந்தில்குமார், துப்புரவு தொழிலாளர் சங்க அழகர், சின்னமாரி, சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

;