தஞ்சாவூர் ஜூன்.8- பட்டுக்கோட்டை சீனிவாசன் நகரைச் சேர்ந்த நம்பிராஜன் மகள் வைஷ்யா நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் கடந்த 5-ஆம் தேதி வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், திருவையாறு சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாவட்டச் செயலாளருமான துரை.சந்திரசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் வைஷ்யாவின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, திமுக சார்பில் ரூ.1 லட்சம் நிதி உதவியை வழங்கினர். அப்போது, மாவட்ட இளைஞரணி ஆரோ.அருள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.