திருச்சிராப்பள்ளி:
திருச்சி உறையூர் டாக்கர் ரோட்டைச் சேர்ந்தவர் ராம்குமார், பெயிண்டர். இவரது மனைவி சந்தியா. இவர்களின் மகள் இலக்கியா(12). இவர் உறையூர் மெதடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 7-ம் தேதி இலக்கியா பள்ளிக்கு சென்றார். இவரது வகுப்பறை முதல் மாடியில் உள்ளது. இவர் உணவு இடைவேளையின் போது சக மாணவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கால் தவறி படிக்கட்டுகளில் உருண்டு விழுந்து மயக்க மடைந்தார்.
உடனே சக மாணவிகள் அவரை தூக்கி அருகில் இருந்த பெஞ்சில் படுக்க வைத்து விட்டு ஆசிரியரி டம் சென்று இதுகுறித்து கூறினர். காயமடைந்த மாணவிக்கு பள்ளிநிர்வாகம் உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்காமல் பெஞ்சில் படுக்க வைத்திருந்ததாகவும், 3 மணி நேரத்திற்கு பிறகு பெற்றோருக்கு தகவல் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.இதன்பின் பள்ளிக்கு சென்ற மாணவியின் உறவினர் ஒருவருடன் மாணவி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த உறவினர் இலக்கியாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.அங்கு மாணவியின் தலையைஸ்கேன் செய்த டாக்டர்கள் அவருக்கு தலையில் அடிபட்டுள்ளது. சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற னர். ஆனால் பணம் கட்ட வசதியில்லாததால் மாணவி இலக்கியா அரசு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவி செவ்வாய் அன்று காலை பரிதாபமாக இறந்தார்.
முற்றுகை
சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்திருந்தால் மாணவி பிழைத் திருப்பார் எனக் கூறி பெற்றோர், உறவினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், இந்திய மாண
வர் சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் செவ்வாய் காலை பள்ளியை முற்று கையிட்டனர். ஆனால் பள்ளி நிர்வாகிகள் இவர்களை சந்திக்காமல் கேட்டை மூடிவிட்டனர்.
இதுகுறித்து தக வலறிந்து வந்த உறையூர் காவல்துறையினர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் ஆவேசமடைந்த மக்கள், இது போல் சம்பவங்கள் இப்பள்ளியில் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் கண்டு கொள்வதில்லை. கீழே விழுந்த மாணவியை உடனடியாக மருத்துவ மனையில் சேர்க்காமல் பெற்றோர் வரும் வரை வைத்திருந்தது ஏன்?
இதற்கு பள்ளி நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.
3 மணி நேரத்துக்குப் பிறகு...
பின்னர் அனைவரும் உறையூர் மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த மாவட்ட கல்வி அதிகாரி சின்ராசு, பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோருடன் பேசினார். பின்னர் அவர் கூறியதாவது, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும். இதுமாதிரி சம்பவங்களில் முதலுதவி அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும். இச்சம்பவம் குறித்து தெரிவித்த சகமாணவிகள் இருவரின் பெற்றோர் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்களுக்கு டிசி வழங்கப்பட்டு வேறு பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.
மாணவி இலக்கியா விழுந்து காயமடைந்தது குறித்து சக மாணவிகள் கூறுகையில், இலக்கியா கீழே விழுந்து அடிபட்டவுடன் நாங்கள் உடனே சென்று ஒரு ஆசிரியையிடம் தெரிவித்தோம்.ஆனால் அந்த ஆசிரியை கண்டு கொள்ளவில்லை. மற்றொரு ஆசிரி யையிடம் சென்று இலக்கியாவின் தலையில் ரத்தம் வழிகிறது என கூறியதற்கு திட்டி அனுப்பி விட்டார். அதன்பின் 3 மணி நேரத்திற்கு பிறகே இலக்கியாவின் பெற்றோருக்கு சொல்லி அனுப்பி னர் என மாணவிகள் கூறினர்.