மன்னார்குடி, ஜூலை 10- மன்னார்குடி நகரின் பல பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது அவதூறு பிரச்சார போஸ்டர்கள் ஒட்டிய இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகர குழு புகார் மனு ஒன்றை அளித்துள்ளது. இதுபற்றி நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் கூறிய தாவது; இந்து முன்னணி அமைப்பினர் தமிழகம் முழுவதும் பல இடங்களில் சீனாவிற்கு ஆதரவாக கம்யூனிஸ்டுகள் இந்தியாவில் செயல்பட்டு வருவதாக அவதூறு பிரச்சா ரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சி யில் எங்கள் இயக்கங்களின் மீது அவப்பெயர் ஏற்படுத்த அவதூறு பிரச்சார துண்டுப் பிரசுரங்களை மன்னார்குடி நகரின் பல பகுதிகளில் ஒட்டியுள்ளனர். மக்களின் பிரச்சனைகளுக்காக நாட்டின் ஒற்று மைக்காக தொடர்ந்து போராடி வரும் மக்களின் இயக்கங் கள் தான் கம்யூனிஸ்ட்இயக்கங்கள். நாட்டு மக்களுக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் எங்கள் மீது அவதூறு பிரச்சார போஸ்டர்களை இந்து முன்னணியினர் ஒட்டியுள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு நகர செயலாளர் எஸ்.ஆறுமுகம் கூறினார்.