திருச்சிராப்பள்ளி, அக்.17- இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவையொட்டி வியாழனன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட் டது. விழாவிற்கு மாவட்டச் செயலாளர் ராஜா தலைமை வகித்தார். கட்சிக் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் ஏற்றினார். விழாவில் மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு, பகு திக்குழு உறுப்பினர்கள், இடைக்கமிட்டி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
கட்சியின் திருத்துறைப்பூண்டி நகரக் குழு சார்பில் கொடியேற்று விழா புதிய பேருந்து நிலையத்தில் நடை பெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் டி.சுப்பிரமணியன் கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திருத்துறைப்பூண்டி நக ரத்தில் உள்ள அனைத்து வார்டுகளி லும் நகரக் குழு சார்பில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது.
மன்னார்குடி
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தின் தென்பறை கிராமம். அடித்தால் திருப்பி அடி என்ற அன்புத் தலைவர் பி.சீனிவாசராவின் வைர வரிகள் உருவான பூமி. தீண்டாமைக் கும் வர்க்க சுரண்டலுக்கும் எதிராக ஒடுக்கப்பட்ட மக்களின் நாடி நரம்பு களை முறுக்கேற்றி செங்கொடிகளை உயர்த்தி ஆண்டைகளின் ஆண வத்திற்கு சாவு மணி அடித்த செங்கொடி இயக்க விவசாயிகள் சங்கம் தோன்றிய மண். வர்க்க போராட்ட வரலாற்றில் இடம் பெற்ற விவசாயத் தொழிலா ளர்களுக்கான முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது களப்பால் கிராமம். கம்யூனிச இயக்கம் துவங்கி நூறா வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை யொட்டி இந்த இரண்டு இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங் கொடி குடும்பங்கள் விழா எடுத்தன. இந்த விழாக் கொண்டாட்டங்கள் களப்பா லில் வியாழன் காலையில் துவங்கின.
களப்பால் குப்பு சிலை
விழாவின் துவக்க நிகழ்ச்சிக்கு விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமை ஏற்றார். தியாகி களப்பால் குப்புவின் புதல்வரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவ ருமான ஏ.கே.கணேசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தியாகி களப்பால் குப்பு வின் உருவச் சிலைக்கு மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் மாலை அணிவித்து வீரவணக்கம்செலுத்தினார். பின்னர் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கிளை செயலாளர்கள் கட்சி உறுப்பினர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கைகளை வழங்கி விழா துவக்கவுரையாற்றினார். பின்னர் களப்பாலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தென்பறை வந்தடைந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கிளை செயலாளர் ஜி.ராம சந்திரன் தலைமை வகித்தார். பின்னர் கட்சிக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நெருஞ் சினக்குடி, விக்கிரவாண்டியம், பெருக வாழ்ந்தான், பாலையூர், கோட்டூர் உள்ளிட்ட 19 ஊர்களிலும் கட்சிக் கொடி கள் மூத்த கட்சித் தோழர்களால் ஏற்றி வைக்கப்பட்டது. ஒரத்தூரில் கொடி யேற்றும் நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெற்றது. நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் எல்.சண்முகவேலு, மூத்த தலைவர் எஸ்.தங்கராசு, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள், கிளை செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி
கட்சியின் திருத்துறைப்பூண்டி வடக்கு ஒன்றியக் குழு சார்பில் கச்சனம் கடைதெருவில் கொடியேற்று விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சி ஒன்றி யக்குழு உறுப்பினர் பி. மாதவவேலன், எஸ்.சேகர் ஆகியோர் தலைமை வகித்த னர். கிளை செயலாளர்கள் பி.தங்கை யன் ஆனந்த் முன்னிலை வகித்தனர். கட்சி மாவட்ட செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி கொடியை ஏற்றி வைத்து சிறப்பு ரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.முருகானந்தம், சி. ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர் வி.டி.கதிரேசன், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற் பட்டோர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி தெற்கு ஒன்றி யத்தின் சார்பில் அனைத்து கிளை வாரி யாக ஒன்றியக்குழு உறுப்பினர்களும், கிளை செயலாளர்களும் கொடியினை ஏற்றி வைத்து பேசினார்கள்.
கும்பகோணம்
குடந்தை நகரில் மேலக்காவேரி உள்ளிட்ட 27 வார்டுகள், புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஎம் கிளைகள் சார்பில் கொடி யேற்று விழா நடைபெற்றது விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சின்னை.பாண்டியன், நகர செய லாளர் கே.செந்தில்குமார், மாவட்ட குழு உறுப்பினர் பார்த்தசாரதி, நகர குழு உறுப்பினர்கள் , கிளை செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உட்கோட்டை கிராமத்தில் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை யில் கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. மாவட்டச் செயலாளர் மணிவேல் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். செல்வராசு, ராமதாஸ், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவிடைமருதூர்
கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு துவக்க விழாவை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திரு விடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில் திருவிடைமருதூர் தோழர் ராமமூர்த்தி நினைவக த்திலும் மற்றும் திருவிடை மருதூர் சிபிஎம் கட்சி கிளைகளிலும் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் ஒன்றியச் செயலாளர் ஜீவபாரதி, மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி, என்.பி.நாகேந்திரன், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் சேகர் சொக்கலிங்கம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றினார்கள். (ந.நி)