tamilnadu

img

தமிழ்நாட்டின் வளத்தை சீர்குலைக்க பாஜகவும், அதிமுகவும் கூட்டு சேர்ந்துள்ளன

தஞ்சாவூர், ஏப்.12-மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்தை ஆதரித்து தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அண்ணாசிலை அருகே வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய நிர்வாகக் குழுஉறுப்பினர் சி.மகேந்திரன் பேசியதாவது:“பாஜக தேர்தலில் வெற்றி பெறநாட்டை பிளவுபடுத்தி மத மோதலை,ஜாதி பாகுபாட்டினை உருவாக்கி பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம்தேர்தலில் வெற்றி பெற முயற்சிக் கிறார்கள்.வடமாநிலத்தில் மக்களை பிளவுபடுத்தி வெற்றி பெற்ற பாரதிய ஜனதாவினர், தமிழ்நாட்டில் அதே போல்மக்களைப் பிளவுபடுத்தி வெற்றி பெறமுயற்சிக்கலாம் என எண்ணிக் கூடபார்க்க வேண்டாம். ஏனென்றால் இதுபெரியார், வள்ளலார், சிங்காரவேலர், ஜீவானந்தம், நல்லகண்ணு போன்றபொதுவுடைமைவாதிகள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் தங்களுடைய விளையாட்டுகளை விளையாடலாம் என எண்ணிக்கூட பார்க்க வேண்டாம் பாரதிய ஜனதாவினர். எங்கெல்லாம் உழைப்பாளிகள், மக்கள் அடிமையாக இருக்கிறார்களோ அவர்களை காப்பாற்றுவதற்காகவே கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி அதற்கான கொள்கையை உருவாக்கினர். பாரதிய ஜனதாவை விரட்டியடிக்க கம்யூனிஸ்டும், திமுககூட்டணியும் ஒன்றிணைந்து கைகோர்த்து நிற்க வேண்டும் என்ற அரசியல் நோக்கம் உள்ளது. பாஜகவும், அதிமுகவும் கூட்டு சேருவதற்கு என்ன அரசியல் நோக்கம் உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர் லைட் ஆலை, மேற்கு தொடர்ச்சி மலை திட்டம், காவேரி படுகை, அணுஉலைத் திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்த துடிக்கும், தமிழ்நாட்டின் வளத்தையும் இயற்கையையும் சீர்குலைக்க நினைக்கும் பாரதியஜனதாவினரை விரட்டி அடிக்க வேண்டும். எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்” இவ்வாறு சி.மகேந்திரன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு பேசுகையில், “கஜா புயலால் பாதிக் கப்பட்ட போது கண்டு கொள்ளாத மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோளோடு, தோள் நின்ற பழனி மாணிக்கத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

;