tamilnadu

img

திருச்சியில் வாலிபர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா

திருச்சிராப்பள்ளி, ஜன.19- திருச்சி பாரதி நகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பாரதி நகர் கிளை சார்பில் இக்கிளையின் 21ம் ஆண்டு துவக்க விழா, 11 ம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா மற்றும் 3 ம் ஆண்டு விளையாட்டு விழா என முப்பெரும் விழா ஞாயிறு அன்று நடை பெற்றது. விழாவிற்கு கிளைத் தலைவர் ராஹிலா பானு தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் லெனின் சங்க கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். மாநகர் மாவட்ட தலைவர் சுரேஷ், கிழக்குப் பகுதி தலைவர் ஷாஜகான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செய லாளர் ராஜா, பகுதி செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மியூசிக் சேர், ஓட்டப் பந்தயம், நடனப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சோலைராஜன், பூபதி, முத்துக் குமார், கருணா, பிரபு, சந்திரசேகர், முரு கன், அமீர், அஜ்மல் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  கிளை பொருளாளர் ஷேக்மொய்தீன் நன்றி கூறினார்.

;