புதுக்கோட்டை, மே.31-புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உலக புகையிலை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழியினை எடுத்துக்கொண்டனர். ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவக்குமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் ராதாஜெயலெட்சுமி, வட்டாட்சியர்கள் கண்ணாகருப்பையா, திருமலை உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.