மின் கம்பியாள் உதவியாளர் தகுதித் தேர்வு
தஞ்சாவூர், ஜூலை 4- வரும் ஆகஸ்ட் 17, 18-ம் தேதிகளில் மின்கம்பியாள் உதவி யாளர் தகுதி தேர்வு(wireman helper competency examination) நடைபெறவுள்ளது. இத்துறை மூலம் மின்கம்பியாள் பயிற்சி பெற்றுத் தேறியவர் மற்றும் தேசிய புனரமைப்புத் திட்டத்தின் கீழ் இத்துறை மூலம் மின்சாரப் பணியாளர் மற்றும் கம்பியாள் தொழிற்பிரிவுகளில் பயிற்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன. இதற்கான தகுதி, மின் ஒயரிங் தொழிலில் 5 வரு டங்களுக்குக் குறையாமல் அனுபவம் உள்ளவராகவும், விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது நிரம்பியவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்கக் குறிப்பேட்டினை, தஞ்சாவூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலை யத்திலிருந்து ரூ.10 ரொக்கமாக செலுத்திப் பெற்றுக் கொள்ள லாம். பூர்த்தியான விண்ணப்பங்கள் துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற் பயிற்சி நிலையம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ வரும் 26-ம் தேதிக்குள் சேர்த்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.
வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறலாம்
திருவாரூர், ஜூலை 4- வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து முறையாக பதிவை புதுப்பித்திருக்க வேண்டும். தகுதியான வர்கள் விண்ணப்ப படிவத்தை வேலைவாய்ப்பு அலுவல கத்தில் பெற்று ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அலுவலக வேலை நாளில் RVL நகர், மன்னார்குடி ரோடு, விளமல், கூட்டுறவு நகர் பேருந்து நிறுத்தம், திருவாரூர் என்ற முகவரியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலமானார்
திருச்சி, ஜூலை 4- திருவாரூர் மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவி யாளர் ஆர்.கணேசன் தாயார் சரோஜா ரத்தினசாமி(85) உடல் நலக்குறைவால் காலமானார். அவரது இறுதி நிகழ்ச்சி இஞ்சிகுடி கணபதி விளாகத்தில் நடைபெற்றது. இறுதி நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட டி.இ.ஓ, சி.இ.ஓ, ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.