tamilnadu

தஞ்சாவூர் மற்றும் திருத்துறைப்பூண்டி முக்கிய செய்திகள்

டிச.22-ல் தமுஎகச சார்பில் பேச்சுப்போட்டி: மாணவர்களுக்கு அழைப்பு

ர்வரும் டிசம்பர் 22 ஆம் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.  இதுகுறித்து தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக மாவட்ட அளவில் முப்பெரும் கவிஞர்கள் (பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்) தினவிழா வருகின்ற டிசம்பர் 22 ஆம் தேதி பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில், நாடியம்மன் கோயில் தெரு எம்.என்.வி திருமண  மண்டபத்தில் நடைபெற உள்ளது.  இவ்விழாவில், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. அன்று மதியமே 2 மணி முதல் 5 மணி வரை போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும், முப்பெரும் கவிஞர்கள் குறித்த கருத்தரங்கமும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் ஒரு கல்லூரியிலிருந்து 3 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். காலை 9 மணி முதல் 10 மணி வரை, பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வோர், விபரங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். “காடு  விளைஞ்சென்ன” “தானாய் எல்லாம் மாறும் என்பது” “இருக்கிறதெல்லாம் பொதுவாய்ப் போனால்” ஆகிய 3 தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.  தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதல் பரிசு ரூ 5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ 3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ 2000 வழங்கப்படும். மேலும் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவுப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும். மேலதிக தகவலுக்கு 94881-27800, 91592- 53830 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குளத்தில் விடப்படும் கழிவுநீர்: கண்டித்து சிபிஎம் போராட்டம்  

திருச்சிராப்பள்ளி, டிச.13- திருச்சி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சப்பூரில் குளம் உள்ளது. மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீரை அந்த குளத்தில் விடுவதால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதி குழு சார்பில் வியாழனன்று பஞ்சப்பூர் திடலில் காத்திருக்கும் போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அபிஷேகபுரம் பகுதிக்குழுச் செயலாளர் வேலுசாமி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். கட்சியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இப்பிரச்சனை குறித்து வெள்ளிக்கிழமை மாலை கிழக்கு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

கோழி வழங்கும் திட்டம்:  விடுபட்டவர்கள் மறியல்  

திருத்துறைப்பூண்டி, டிச.13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நுணாக் காடு ஊராட்சியில் கோழி வழங்கும் திட்டத்தின் கீழ் விடுபட்டவர்களுக்கு கோழி வழங்க வலியுறுத்தி நடை பெறவிருந்த சாலை மறியல் போராட்டம் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி துறை அலு வலர் ராமலிங்கம், கால்நடை மருத்துவர் காவியா உள் ளிட்டவர்கள் கோரிக்கைக ளை விரைவாக நிறைவேற்றி தருவதாக உறுதியளித்த னர். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர் டிவி.காரல்மார்க்ஸ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர்.வேதையன், ஏகே. வேலவன், கிளை செயலாளர்கள் இ.தங்கதுரை, வீரமணி, பாண்டியன், நேரு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கொள்ளிடம் கடைமடைப் பகுதிகளில் கதவணை: அதிகாரி உறுதி

 சீர்காழி, டிச.13- கொள்ளிடம் பகுதியில் நீர் வள நிலவள திட்டப்பணிகளை தஞ்சை காவிரி வடி நில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் நேரில் ஆய்வு செய்தார்.   நாகை மாவட்டம் கொள்ளி டம் பகுதியில் நடைபெற்று வரும் நீர் வள நிலவள திட்டப்பணிக ளான தற்காஸ் கிராமத்தில் 9.8 கோடி மதிப்பீட்டில் உப்பனாற் றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கதவணையை தஞ்சை காவிரி வடி நில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் அன்பரசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், கொள்ளிடம் அருகே அளக்குடி யில் கொள்ளிடம் ஆற்றில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தற்பொழுது கரையை பலப் படுத்தும் வகையில் கருங்கல் போட்டு தற்காலிகமாக அடைப்பு சரி செய்யப்படும். பின்னர் நிரந்தர மாக கான்கிரீட் சுவர் கட்டப் படும்.  கொள்ளிடம் அருகே பொறை வாய்க்கால், கழுமலையாறு ஆகிய கடைமடை பகுதிகளில் கதவணையை அமைக்கப்படும் என்றார். மயிலாடுதுறை செயற் பொறியாளர் ஆசைத்தம்பி, உதவி பொறியாளர்கள் விவேகா னந்தன், முத்துமணி, சரவணன், கனகசரவணச் செல்வன் உள் ளிட்டோர் ஆய்வில் உடனிருந்த னர்.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து போராட்டம்  

தஞ்சாவூர், டிச.13- மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, தஞ்சாவூர் மற்றும் கும்ப கோணத்தில் நகல் கிழிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட திமுக இளைஞரணியினர் 59 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் வெள்ளிக் கிழமை கைது செய்தனர். கும்பகோணம் ராமசுவாமி கோயில் முன் நடந்த ஆர்ப்பாட் டத்துக்கு திமுக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் இரா.தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மத்திய அர சின் குடியுரிமை சட்ட திருத்த மசோ தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர். தஞ்சாவூர் அண்ணா சிலை அருகே தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பா ளர் சண்.ராமநாதன் தலைமை யில் ஆர்ப்பாட்டமும், சட்ட திருத்த நகல் கிழிப்பு போராட்டமும் நடை பெற்றது. இதில் ஈடுபட்ட 16 பேரை தஞ்சாவூர் மேற்கு காவல் துறை யினர் கைது செய்தனர். இதே போல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் 43 பேரை கும்ப கோணம் மேற்கு காவல்துறையி னர் கைது செய்தனர்.