tamilnadu

தஞ்சை முக்கிய செய்திகள்

கஜா புயல் நிவாரணம் கேட்டு விவசாயி தர்ணா

தஞ்சை, ஜூலை 1- தஞ்சை பேராவூரணி அடுத்த காலகம் பகுதியை சேர்ந்த வர் ரவிசந்திரன் (40), விவசாயி. கஜா புயலால் இவரது 5 ஏக்கர் தென்னந்தோப்பில் 350-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதமடைந்தன. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 2.40 லட்ச ரூபாய் நிவாரணம் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரி வித்தனர். ஆனால் நிலம் இறந்து போன தந்தை பழனிவேல் பெயரில் இருப்பதாக கூறி அதிகாரிகள் நிவாரணப் பணத்தை தரவில்லை.  இதனால் ரவிசந்திரன், தனது மூன்று மகளுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிவாரணம் கேட்டு தர்ணாவில் ஈடு பட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரை ஆட்சியரி டம் அழைத்து சென்று விசாரித்தனர்.

தனியார் பள்ளி கட்டணக் கொள்ளை தஞ்சை ஆட்சியரகத்தில் போராட்டம்

தஞ்சை, ஜூலை 1-  தஞ்சை ஒரத்தநாடு அருகே கூவத்துார் கிராமத்தை சேர்ந்த வர் ஜெயசங்கர், இவரது மகள்கள் தமிழ், 10 ஆம் வகுப்பு, கியூபா 7 ஆம் வகுப்பு படிக்கின்றனர். இருவரும் ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். தனியார் பள்ளியில் கல்விக் கட்டண நிர்ணய அடிப்படையில் கல்வி கட்ட ணம் வசூல் செய்ய வேண்டும் எனவும், இதுவரை செலுத்திய பணத்தை திரும்பி தருமாறும், ஜெயசங்கர் பள்ளி நிர்வாகத்தில் கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது.  இந்நிலையில் விடுமுறை முடிந்து கியூபா மீண்டும் பள்ளிக்கு திரும்பிய போது, கட்டணம் கேட்டு பள்ளிக்கு வெளி யில் நிற்க வைத்ததாகவும், அதனால் ஜெயசங்கர் பள்ளிக்கு சென்று மாற்றுச் சான்றிதழ் கேட்டுள்ளார். மேலும் கல்வி அதி காரிகளிடம் புகாரும் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவ டிக்கையும் இல்லாததால் திங்களன்று தன் குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்டார்.

பைக்கில் தீப்பந்தத்துடன் வந்து ஓட்டுநர் தீக்குளிக்க முயற்சி

கரூர், ஜூலை 1-  கரூர் பெரியகோதூர் எல்என்எஸ் போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன்(45). இவர் தனியார் வாகன ஓட்டு நராக பணியாற்றி வருகிறார். இவர் குடியிருக்கும் பகுதி அரசு புறம்போக்கு நிலம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் தங்களது நிலம் எனக் கூறி, உடனே இடத்தை விட்டு காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக கடந்த 3 மாதங்களாக நடராஜனை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நடராஜன் கரூர் நகர காவல்நிலையத்தில் புகார் செய்தாராம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.  இதனால் விரக்தியடைந்த நடராஜன் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்திற்கு தனது பைக்கில் தீப்பந்தத்தை பைக் முன் சொருகியவாறும், கையில் பெட்ரோல் கேனை வைத்துக் கொண்டு வேகமாக வந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காவலர்கள் அவரை தடுத்தும் பிடிபடாமல் நேராக ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் வந்தவரை அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் ஓடி வந்து பைக்கை மடக்கினர்.  இதனால் பைக்கில் இருந்து தீப்பந்தத்துடன் கீழே விழுந்த நடராஜன், உடனே கையில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்ற முயன்றார். இதையடுத்து காவலர்கள் அவருடன் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் பெட்ரோல் கேனை பறித்த னர். பின்னர் தீப்பந்தத்தை அணைத்தனர். இதனையடுத்து தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மூன்றாவது வாரமாக நிலத் தகராறு மற்றும் கந்து வட்டிக்கொடுமை என இதுவரை மூன்று பேர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார்களில் சம்பந்தப் பட்ட துறை அலுவலகங்கள், காவல் நிலையங்களில் உரிய நட வடிக்கை இல்லாததால் குறைதீர் நாளில் மனமுடைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதை யாகி வருகிறது.