tamilnadu

தஞ்சாவூர் ,அறந்தாங்கி முக்கிய செய்திகள்

அறந்தாங்கி அருகே  கார் - இரு சக்கர வாகனம் மோதல் ஒருவர் உயிரிழப்பு; 3 பேர் படுகாயம்

அறந்தாங்கி, நவ.13- புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த பாக்கிய ராஜ் தனது குடும்பத்துடன் வேளாங்கண்ணி செல்வதற்காக காரில், அறந்தாங்கி வழியாக கூத்தங்குடி, கோவில்வயல் அருகே சென்று கொண்டிருந்த போது மணமேல்குடியில் இருந்து அறந்தாங்கி நோக்கி வந்து கொண்டிருந்த இரு சக்கர வாகனமும் காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதின. கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் பாக்கியராஜ்(50) சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். காரில் இருந்த ஸ்டாலின்(25), வெண் ணிலா(50) பலத்த காயத்துடன் அறந்தாங்கி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக் காக புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நடேசனின் கை, கால்கள் துண்டு துண்டாகின. உயிருக்கு ஆபத்தான நிலை யில் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளார். வேகமாக மரத்தில் மோதிய காரில் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியவர்களை மீட்க ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீயணைப்புத் துறையினரும் அப்பகுதி பொதுமக்க ளும் வெண்ணிலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பாக்கியராஜின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்கு கொண்டு செல்லப் பட்டது. சம்பவ இடத்தை அறந்தாங்கி டிஎஸ்பி கோகிலா மற்றும் கோட்டாட்சியர் குணசேகரன் ஆய்வு செய்தனர். ஆவு டையார்கோவில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை மதபோதகர் மீது  இளம்பெண் பாலியல் புகார்

தஞ்சாவூர், நவ.13- தஞ்சாவூர் மாதாக்கோட்டை ரோட்டைச் சேந்த 24 வய துடைய இளம்பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை அன்று தனது பெற்றோர் மற்றும் வழக்கறிஞருடன் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவில், “நான் மாதாகோட்டை ரோடு வைரம் நகரைச் சேர்ந்த பெந்தகோஸ் சபைக்கு சென்று வந்தபோது, அங்கிருந்த மதபோதகரான ஸ்டேன்லி டென்னி ராபர்ட்ஸூக்கும் எனக்கும் இடையே கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பழக்கம் ஏற்பட்டது.  இதனால் அவர் என்னை திரு மணம் செய்து கொள்வதாக கூறினார். மேலும், எனக்கு ஆசை வார்த்தைகளை கூறி பலமுறை பாலியல் வல்லுறவு கொண்டார். தற்போது திருமணம் செய்து கொள்ள மறுக்கி றார். என்னை ஏமாற்றிவிட்டு அவர் வேறு பெண்ணை விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். எனவே ஸ்டேன்லி டென்னி ராபர்ட் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து காவல்துறையினர் இந்த மனுவை பெற்றுக் கொண்டு, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேர்தல் அலுவலர்களுக்கு  பயிற்சி வகுப்பு 

தஞ்சாவூர், நவ.13- தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நகர்ப்புற உள்ளாட்சி களில் நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலுவ லர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்குவது குறித்த பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தலைமை யில் ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள தேர்தல் நடத்தும் அலு வலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்க ளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இயக்குவது குறித்த விரிவான பயிற்சி அளிக்கப்பட்டது.  பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர், தஞ்சாவூர் நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர், மாநகராட்சி ஆணையர், கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் உதவி இயக்கு நர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.