tamilnadu

கோயில் கும்பாபிஷேகம்

தஞ்சாவூர் மே 26-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பேரூராட்சிக்குட்பட்ட ஆதனூரில் ஸ்ரீ சித்தி விநாயகர், ஸ்ரீ காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது. இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை தொடங்கி அனுக்ஞை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆதனூர் கிராமத்தினர் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர். 

;