tamilnadu

img

புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

புதுக்கோட்டை, ஜூன்.18- புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதி யில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென இடதுசாரிக்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடந்த பலவருடங்களாகப் போராடி வரு கின்றன. தொடர்ச்சியான போராட்டத்தின் காமராஜபுரத்தில் கடந்த பல வருடங்களாக குடியிருந்து வருபவர்களுக்கு அரசு சார்பில் இலவச பட்டா வழங்கப்பட்டு வருகிறது. ஏற்க னவே 386 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக திங்கள்கிழ மையன்று காமராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் 157 பேருக்கு இலவசப் பட்டாவிற்கான ஆணையை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழங்கினார். ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி, வீட்டுவசதி வாரியத் தலைவர் பி.கே.வைரமுத்து, கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி, வட்டாட்சியர் பரணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.