நாமக்கல், ஆக.9- மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, வெள்ளியன்று கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கார்ப்பரேட்களுக்கு ஆதரவான புதிய கல்வி கொள்கை வரைவிற்கு, நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஆண்டகளுர் கேட் அரசு திருவள்ளுவர் கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் நாமக்கல் மாவட்ட துணைத் தலைவர் கோபால் தலைமை வகித்தார். ஒன்றிய நிர்வாகி கள் தங்கராஜ், நந்தினி, எஸ்.சுரேஷ், புகழேந்தி, குடி யரசன், புகழேந்தி, சூர்யா உள்ளிட்ட திரளான மாண வர்கள் கலந்து கொண்டனர்.