tamilnadu

img

கல்லூரியில் அடிப்படை வசதி கோரி 2-வது நாளாக மாணவர்கள் போராட்டம்

அறந்தாங்கி, ஜூலை 11- புதுக்கோட்டை மாவட்டம் ஆவு டையார்கோவிலை அடுத்த பெருநாவ லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அடிப்படை வசதிகள் கேட்டு 2வது நாளாக  மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் செய்த னர். குடிதண்ணீர், கழிப்பறைக்கு தண் ணீர், சேதமடைந்த எலக்ட்ரிக் பொருட் களை சரி செய்ய வேண்டும் இரவு நேரங்களிலும் விடுமுறை தினங்களி லும் சமூக விரோதிகளின் கூடாரமாக கல்லூரி வளாகம் இருப்பதால் சுற்று சுவர் கட்ட வேண்டும் போன்ற அடிப் படை வசதிகளை செய்து தர வலி யுறுத்தி வியாழன் அன்று மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்க ணித்து அறந்தாங்கி -ஆவுடையார் கோவில் சாலையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பியவாறு மறியல் போராட்டம் செய்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் கோகிலா, அறந்தாங்கி வட்டார வளர்ச்சி அலுவ லர் பிரேமாவதி, வட்டாட்சியர் சூரிய பிரபு உள்ளிட்டோர் மாணவர்களுடன் பேச்சு நடத்தி கோரிக்கைகளை நிறை வேற்றி தருவதாக கூறினர். இதை யடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

;