tamilnadu

img

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம்

தரங்கம்பாடி, ஜன.10- நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு  கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில்  உள்ளிருப்பு போராட்டம் வெள்ளியன்று நடை பெற்றது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வும், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை க்கழக மாணவர்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தும் நடைபெற்ற போ ராட்டத்திற்கு சங்க வட்டத் தலைவர் மகேஷ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அமுல் காஸ்ட்ரோ, மாவட்ட துணைச் செயலா ளர் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர். வகுப்புகளை புறக்கணித்து 2  ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போரா ட்டத்தில் பங்கேற்று மக்களை பிரிக்கும் மத்திய அரசுக்கு எதிராக தொடர் கண்டன முழ க்கங்களை எழுப்பினர்.

;