புதுக்கோட்டை: அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமையன்று கோரிக்கை மாநாடு நடைபெற்றது. மேலும், ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளுக்குத் தேவை யான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தியும் இந்த மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டக்குழு கோபி தலைமை வகித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்து நிலவன் உரையாற்றினார். மாணவர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஹரிசுர்ஜித் நிறைவுரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா ஆகியோர் பேசினர். முன்னதாக கண்மணி வரவேற்க, யுகேஷ் நன்றி கூறினார்.