tamilnadu

img

உய்யக்கொண்டான் கரைச் சாலைகளை சீரமைக்கக் கோரி போராட்டம்

திருச்சிராப்பள்ளி: திருவரம்பூர் மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், மஞ்சக்குடி காட்டூர் வரை உள்ள உய்யக்கொண்டான் கரை சாலைகளை சீர் செய்ய வேண்டும். கீழகல்கண்டார்கோட்டை நத்தகுளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கிளை வாய்க்கால் கரையில் அமைந்துள்ள சுடுகாட்டில் எரிமேடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் திருவெறும்பூர் மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் திங்களன்று நடைபெற்றது.  போராட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி மாநிலசெயலாளர் சாமிநடராஜன். மாவட்டசெயலாளர் கே.சி.பாண்டியன். சி.பி.எம் காட்டூர் பகுதி செயலாளர் மணிமாறன், தவிச மாவட்ட பொருளாளர் தனபால் ஆகியோர் பேசினர். எல்லக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியசாமி, மதிமுக அன்புராஜ், ராதாகிருஷ்ணன், பாலச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் கொடியேற்றப்பட்டது. பின்னர் இளநிலை பொறியாளர் ஜோசப்பிடம் மனு அளிக்கப்பட்டது.