tamilnadu

img

கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிடக் கோரி போராட்டம்

குடவாசல், மார்ச் 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் உள்ள பெரியார் சிலை முன்பாக கோயில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட கோரி  போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சோம.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் துவக்கி வைத்து பேசினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.எஸ்.கலியபெருமாள், பி.கந்தசாமி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் கே.கைலாசம், நகர செய லாளர் சி.டி.ஜோசப், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.சுமதி  உள்பட திரளாக கலந்து கொண்ட னர். இதே போல் வலங்கைமான் ஒன்றி யம் ஆலங்குடி கடைவீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் வலங்கை மான் ஒன்றிய செயலாளர் என்.ராதா தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி துவக்கி வைத்து உரையாற்றினார்.  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேகர் கோரிக்கையை விளக்கிப் பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் கே.சுப்பிரமணியன்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு தொடர் முழக்கம் செய்தனர்.