tamilnadu

img

பெரம்பலூரில் மாநில இறகுப்பந்து போட்டி

பெரம்பலூர், மே 12-பெரம்பலூர் மாவட்ட எம்ஜிஆர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி சனியன்று துவங்கியது. மாவட்ட இறகுப்பந்து விளையாட்டு வீரர்கள் சங்கம் சார்பில் நடந்த போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமசுப்ரமணியராஜா தொடங்கி வைத்தார். போட்டியில் சென்னை, மதுரை, நாகப்பட்டினம், புதுச்சேரி, திருச்சி, சேலம் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 46 அணி கலந்து கொள்கின்றன. முதல் நாள் போட்டியில் சென்னை, புதுச்சேரி, மதுரை, நாகை மாவட்ட அணிகள் விளையாடின.இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று அணி வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10ஆயிரம் என ரொக்கப் பரிசும், பரிசுக் கோப்பையும் வழங்கப்படும்.