tamilnadu

img

புனித அந்தோணியார் கோவிலில் பொங்கல் வைத்த கிறிஸ்தவ மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே புனல்வாசல் கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் கோவில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்து சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். 10 ஆவது ஆண்டு கரைகாரர்கள் சார்பில் நடை பெற்ற விழாவில் முன்னதாக கோவிலின் சார்பில் முதலாவதாக 5 பொங்கல் பானைக ளில் பொங்கலிடப்பட்டது.    தொடர்ந்து கோவில் வளாகத்தில் கிராம மக்களால் 500 க்கும் மேற்பட்ட  பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளியின் தாளாளரும் கோவிலின் பங்கு தந்தையுமான வின்சென்ட் தலைமை யில் கூட்டு பாடல் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உதவி பங்குத்தந்தை விக்டர்அலெக்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து பிப்.18 காலை 10 மணியளவில் முதலாவதாக கோவில் மாடுகளும் பின்னர் கிராமத்தின் மாடுகளும் அவிழ்த்து விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை புனல் வாசல் கிராமத்தைச் சேர்ந்த 10 ஆவது கரைகாரர்களும், கிராம மக்களும் செய்துள்ளனர். 

;